districts

img

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டி: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கல்

அரியலூர், டிச.24- அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக்கல்வித் துறை, ஒருங் கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாவட்ட அளவி லான கலைத்திருவிழா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் விழா, அரியலூரில் நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமை வகித்தார். ஜெயங் கொண்டம் எம்எல்ஏ க.சொ. க.கண்ணன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போக்கு வரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பரிசு களை வழங்கினார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜய லெட்சுமி, அரியலூர் நகர் மன்றத் தலைவர் க.சாந்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத் தலைவர் இ.அபி நயா மற்றும் அரசு அலு வலர்கள் கலந்துகொண்ட னர்.