அரியலூர், டிச.3- அரியலூர் மாவட்டம் வாரணவாசி அரசு புதையுயிரிப்படிவ அருங்காட்சியகத்தில் டைனோசர் முட்டை பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. டைனோசர் முட்டையினை தஞ்சாவூர் தனியார் (தாமரை மெட்ரிக்குலேசன்) பள்ளியைச் சேர்ந்த 455 மாணவ, மாணவியர்கள் மற்றும் 20 ஆசிரியர்களுடன் மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி நேரில் பார்வையிட்டார். அப்போது, மாணவர்களுக்கு டைனோசர் வாழ்ந்த காலங்கள், அரியலூர் பகுதி கடலாக மாறிய காலங்கள், மீண்டும் மக்கள் வாழும் புவியாக மாறிய காலங்கள், அருங்காட்சியகத்தில் உள்ள அனைத்து புதையுயிரி படிமங்கள் குறித்து அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவக்குமார் மாணவர்களுக்கு விளக்கி கூறினார்.