districts

img

மின்சாரம் - அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச் 29- அரியலூர் மாவட்டம் கொக்க ரனை கிராமத்தில் வசித்து வந்த ஏழை, எளிய மக்களின் வீடுகளை இடித்து இடமாற்றம் வழங்கிய இடத்தில் மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகம் முன்பு தமிழ்  நாடு விவசாயிகள் சங்கம், பொது மக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு கிளைத் தலைவர் ஆர்.மணிமேகலை தலைமை வகித்தார். பால் உற்பத்தி யாளர் சங்க தலைவர் பி.கிருஷ்ண மூர்த்தி துவக்கி வைத்தார். விவ சாயிகள் சங்கம் மாவட்டச் செயலா ளர் ஆர்.மணிவேல், மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.இளவர சன், ஜெயங்கொண்டம் ஒன்றியச் செயலாளர் எம்.வெங்கடாசலம், மாதர் சங்க மாவட்டத் தலைவர் வி. பத்மாவதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  ஆர்ப்பாட்டத்தில், குருவாலப் பர் கோவில் ஊராட்சி கொக்கரனை கிராமத்தில் வசித்து வந்த ஏழை,  எளிய மக்களின் வீடுகளை இடித்து இடமாற்றம் செய்யப்பட்டது. இந்  நிலையில் இடமாற்றம் செய்யப்  பட்ட இடத்தில் மின்சாரம் மற்றும்  போதிய அடிப்படை வசதிகள்  செய்ய வலியுறுத்தியும், உட்  கோட்டை ஊராட்சியில் உள்ள கரை மேட்டில் வசிக்கும் மக்களுக்கு தொகுப்பு வீடு, இலவச மின் இணைப்பு, மின்விளக்கு, பொது கழிப்பிடம், சாலை வசதி, கரவை மாட்டு கடன் உள்ளிட்ட அடிப்படை  வசதிகள் செய்து தர மாவட்ட ஆட்சி யர் நடவடிக்கை எடுக்க வேண் டும்  என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகள் வலியுறுத்தப்பட்டன.