districts

பூட்டிக் கிடக்கும் அமுத சுரபி கடன் கூட்டுறவு சங்கம் பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி: காவல்துறை விசாரணை

அரியலூர், மே 10 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத் தில் அமுதசுரபி எனப்படும் கடன் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது.  இச்சங்கத்தில் சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் வைப்புத்தொகை கட்டியுள்ளனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த சிறு வணிகர்கள் சாலையோர வியா பாரிகள் மற்றும் இல்லத்தரசிகள் என  நூற்றுக்கணக்கானோர் தினசரி சேமிப்பு  என்ற முறையில் அவர்களின் வருமானத் திற்கு ஏற்ற வகையில் அச்சங்கத்தில் ரூ.100 முதல் 5000 வரை என தினசரி கட்டி சேமித்து  வந்தனர்.  சேமிப்பு பணத்தை வசூல் செய்வதற் காக பணியாளர்களும் சங்கத்தால் நியமிக்கப் பட்டுள்ளனர்.  இவர்கள் திணமும் சேமிப்பு  கணக்கு வைத்திருப்பவர்களின் இடத்திற்குச்  சென்று வசூல் செய்து கொள்வது வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களாக  வசூல் செய்வதற்கு யாரும் வராததால், அமுத  சுரபி தலைமை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் உரிய பதில் கிடைக்கவில்லை.  இதனையடுத்து அலுவலகத்திற்கு சென்று பார்த்தபோது கடந்த 10 நாட்களாக அலுவலகம் திறக்கப்படாதது தெரிய வந்தது. இதனால் தினசரி சேமிப்பு பணம் கட்டிய மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பாதிக் கப்பட்ட மக்கள் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை  நடத்தி வருகின்றனர். மேலும் பொதுமக்களிட மிருந்து வசூலிக்கப்பட்ட தொகை சுமார் ரூ. 1  கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படு கிறது.