districts

தீ தொண்டு வாரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

அரியலூர், ஏப். 21 -  1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி  மும்பையில் நடந்த தீ விபத்தில் 66 தீய ணைப்பு வீரர்கள் மற்றும் பல்வேறு துறை களை சேர்ந்தவர்கள் என 100-க்கும் மேற்பட் டோர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் இறந்து போன தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தீயணைப்பு துறை சார்பில் தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப் பட்டு வருகிறது.  இதனை முன்னிட்டு தீ தடுப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், புதனன்று அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் உள்ள அன்னை தெரசா மெட்ரிகுலேஷன் பள்ளி  மாற்றம் நர்சிங் கல்லூரியில் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன்ராஜ் தலைமையி லான வீரர்கள் குழுவாக இணைந்து மாண வர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை களை செயல்முறை விளக்கத்துடன் செய்து  காண்பித்தனர்.