districts

img

திரிபுராவில் சிபிஎம் ஊழியர்கள் மீது தாக்குதல் பாஜக, ஆர்எஸ்எஸ்-ஐ கண்டித்து ஆர்ப்பாட்டம்

அரியலூர், மார்ச் 11- திரிபுரா மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீதும், அலுவலகம் மீதும் கொலைவெறி தாக்குதல் நடத்திய பாஜகவினரை கண்டித்து அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் கடைவீதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு ஆண்டிமடம் வட்டச் செய லாளர் வி.பரமசிவம் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்டச் செயற்குழு ஆர்.மணிவேல், மாவட்டக் குழு உறுப்பினர்கள் அருணாச் சலம், சங்குபாலன் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள் கலந்து கொண்டனர். 

;