districts

அரியலூர், பெரம்பலூர் முக்கிய செய்திகள்

சிஐடியு-வுடன் இணைவு

அரியலூர், மார்ச் 14 - அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் உஞ்சினி கிராமத்தில் இருசக்கர வாகனத்தில் ஜவுளி விற்பனை செய்யும்  வியாபாரிகள் சங்கம் சிஐடியு சங்கத்தோடு இணைந்தது. இதில் மாவட்ட செயலாளர் துரைசாமி புதிய நிர்வாகிகள் தேர்வு  செய்து வாழ்த்துரை வழங்கினார். செந்துறை ஒன்றிய செயலா ளர் கு.அர்ச்சுணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


லட்சுமி நர்சிங் கல்லூரியில் இன்று முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி

பெரம்பலூர், மார்ச் 14 - டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு, இலவச பயிற்சி வகுப்பில்  சேரலாம் என லட்சுமி நர்சிங் கல்லூரி தாளாளர் டாக்டர் கருணா கரன் அழைப்பு விடுத்துள்ளார்.  இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், பெரம்பலூர் லட்சுமி மருத்துவமனையின் அங்கமான, லட்சுமி நர்சிங்  கல்லூரி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் இணைந்து,  டிஎன்பிஎஸ்சி குரூப் தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்பை நடத்துகிறது.  வகுப்புகள் மார்ச்  15 (புதன்கிழமை) முதல் தொடர்ந்து 2 மாதம் நடக்கிறது. திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் காலை 10 மணி  முதல் 1 மணி வரையும், சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில்  முழுநேர வகுப்பும் நடத்தப்படுகிறது.  இந்த பயிற்சி வகுப்பில் போட்டித் தேர்வுகளுக்கு, பயிற்சி  அளிக்கும் நன்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்டு  பாடம் நடத்தப்படுகிறது. பயிற்சி வகுப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தேவையான புத்தகங்கள் மற்றும் வினா-விடை  புத்தகம் ஆகியவை குறைந்த கட்டணத்தில் வழங்கப்படு கிறது. விருப்பமுள்ளவர்கள் சேர்ந்து பயனடையலாம். மேலும், விவரங்களுக்கு 96009-32463, 94872-72675 என்ற  எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கேட்டுக் கொண்டு உள்ளார்.


 

;