districts

அரியலூர் நகராட்சியில் ரூ.8 கோடியில் புதிய பேருந்து நிலையம் அமைய உள்ளது போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தகவல்

அரியலூர், டிச.20- அரியலூர் மாவட்டம் செந்துறை தனி யார் மண்டபத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் சார்பில் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண் காட்சி மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில், அரியலூர் சட்ட மன்ற உறுப்பினர் கு.சின்னப்பா மற்றும் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சியினை துவக்கி வைத்து, பயனாளி களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிற் கிணங்க, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் உள்ளூரில் விளை விக்கப்படுகிற உயர்தர பயிர் வகைகளை வெளிச்  சந்தைக்கு எடுத்துக்காட்டும் வகையில், உயர்தர உள்ளூர் ரகங்களை பிரபலப்படுத்துவதற்கான கண்காட்சி செந்துறையில் துவக்கி வைக்கப் பட்டுள்ளது.  கண்காட்சியில், அரியலூர் மாவட்டத்தில் விளைவிக்கப்படுகிற குறிப்பாக நெல் ரகங்க ளான யானைகவனம், வெள்ளைகவனி, மாப்பிளை சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களும், இதேபோன்று இயற்கை முறை சார்ந்து விளை விக்கப்படும் விவசாய பொருட்களையும் சந் தைப்படுத்துவதற்கும், இப்பகுதி விவசாயிகள் விளைவிக்கிற காளான், தேனீ வளர்ப்பு மூலம் பெறப்படும் தேன் போன்ற பொருட்களை வெளிச்  சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லும் வகையில் இக்கண்காட்சி நடைபெறுகிறது.

இதேபோன்று வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் சார்பில் 5 பயனாளி களுக்கு மானிய விலையில் ரூ.1.06 லட்சம் மதிப்பில் பேட்டரி விசை தெளிப்பான்கள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களும், வரு வாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 2 பய னாளிகளுக்கு முதலமைச்சரின் பொது நிவா ரண நிதியின் கீழ் தலா ரூ.1 லட்சம் என ரூ.2  லட்சம் மதிப்பில் நிவாரண நிதியுதவித் தொகைக்  கான காசோலைகள் என மொத்தம் 7 பயனாளி களுக்கு ரூ.3.06 லட்சம் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள்  வழங்கப்பட்டுள்ளன. வேளாண் துறைக்கு கடந்த இரண்டு ஆண்டு கள் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்  யப்பட்டுள்ளது. இந்தியாவில் வேறு எந்த மாநி லத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில்தான் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம் படுத்தும் வகையில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது வேளாண் துறையில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் பொதுமக்களின் நீண்ட நாள்  கோரிக்கையினை ஏற்று அரியலூர் நக ராட்சிக்கு புதிய பேருந்து நிலைய திட்டம் தமிழ் நாடு முதலமைச்சரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அரியலூர் நகராட்சியில் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்க  திங்களன்று அரசாணை வெளியிடப்பட்டுள் ளது. இதற்கான டெண்டர் பணிகள் ஆரம்பிக் கப்பட்டு, விரைவில் பேருந்து நிலையக் கட்டு மானப் பணிகள் தொடங்கும். இவ்வாறு அவர் பேசினார்.