உதகை, மார்ச் 31- வனப்பகுதிக்குள் கடத்தி சென்று பழங் குடியின சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, வாலிபருக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உதகை மகளிர் நீதி மன்றம் உத்தரவிட்டது. நீலகிரி மாவட்டம், மசினகுடி அருகே மாவனல்லா குரூப் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (23). இவர் கடந்த 11.3.2018 ஆம் தேதியன்று 8 வயது மதிக்கத் தக்க பழங்குடியின சிறுமியை அடர்ந்த வனப்பகுதிக்குள் கடத்திச் சென்று, பாலி யல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து அச்சிறுமி, பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சிய டைந்த சிறுமியின் பெற்றோர் கூடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத் தில் புகாரளித்தனர். அதனடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்த னர். இந்த வழக்கு விசாரணை உதகை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், புதனன்று மாவட்ட முதன்மை நீதிபதி சஞ்சய் பாபா தீர்ப்பளித்தார். இதில், பழங்குடியின சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வெங்கடேசுக்கு போக்சோ சட்ட பிரிவின் கீழ் 20 ஆண்டு களும், கடத்தி சென்று பாலியல் தொல்லை கொடுத்த பிரிவின் கீழ் 10 ஆண்டுகளும் என மொத்தம் 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து உதகையிலிருந்து வெங்க டேசை காவல் துறையினர் கோவை மத் திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.