districts

img

உலக சாதனை நிகழ்த்திய திருச்சி மாநகராட்சியின் மாபெரும் சதுரங்க விளையாட்டு

இந்தியாவில் முதல் முறையாக சென்னை மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியா போட்டி ஜூலை 24 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 188 நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு அலுவலகம் முன்பு செஸ் ஒலிம்பியாட் போட்டியின் விபரங்கள் அடங்கிய தகவல்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும், பொது மக்களுக்கு தமிழ்நாட்டில் நடக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விளம்பர பேனர்கள் வைக்கவும் சதுரங்கப் போட்டிகள் நடத்தவும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

திருச்சிராப்பள்ளி, ஜூலை 17 - திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை  அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமா ரின் மேற்பார்வையில் சனிக்கிழமை அரசு,  அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளி களின் 2140 மாணவ-மாணவிகள் திருச்சி, கண்டோன்மென்ட், கேம்பியன் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஒன்றாகக் கூடினர்.  அவர்களுக்கு பிரபலமான பாரா  ஒலிம்பிக் செஸ் வீராங்கனை கா.ஜெனித்தா  ஆண்டோ வாயிலாக, செஸ் விளை யாட்டினை கற்பித்து பாடம் நடத்தப்பட்டது. தொடர்ந்து அனைவருக்கும் செஸ் செட் வழங்கப்பட்டது. சதுரங்க விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. துவக்க  விழாவினைத் தொடர்ந்து செஸ் பாடம்,  செஸ் போட்டிகள் மாணவர்களுக் கிடையே நடைபெற்றது. 4 உலக சாதனை  நிறுவனங்களுக்கு இந்நிகழ்வு பரிந்துரை செய்யப்பட்டதை தொடர்ந்து உலக சாதனை நிறுவனங்களின் ஆய்வா ளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டனர்.  ஆய்வின் முடிவில் இந்த மாபெரும் நிகழ்வு, ‘ஒரே நேரத்தில் மிக அதிக பங் கேற்பாளர்களை கொண்டு நடத்தப்பட்ட செஸ் பாடம்’ எனும் உலக சாதனையைப் படைத்தது.  எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக  சாதனை நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடிகேட்டர் அமீத் கே.ஹிங்கரோனி, அட்ஜுடிகேட்டர் முனைவர் சத்யஸ்ரீ குப்தா, ஏஷியன் ரெக்கார்ட்ஸ் அகாடமி  நிறுவனத்தின் அம்பாஸிடர் மரு.செந்தில் குமார், இந்தியா ரெக்கார்ட்ஸ் அகாடமி நிறுவனத்தின் சீனியர் அட்ஜுடிகேட்டர் ஜெகநாதன், தமிழன் புக் ஆஃப் ரெக் கார்ட்ஸ் நிறுவனத்தின் மூத்த, பதிவு மேலா ளர் முனைவர் பாலசுப்ரமணியன் உலக  சாதனை சான்றிதழ்களை நகராட்சி நிர்வா கத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சி யாளரிடம் வழங்கி, பதக்கங்களை அணி வித்து கௌரவப்படுத்தினர்.  இதனைத் தொடர்ந்து மாணவர் களுக்கு உலக சாதனை சான்றிதழ்களை யும், பதக்கங்களையும் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் வழங்கி சிறப்பித்தார். கடந்த 31.12.2018 ஆம் ஆண்டு உக்ரைன் நாட்டில் 1496 பேர் கலந்து கொண்டு படைத்த இந்த சாதனையை, தற்போது தமிழ்நாட்டில் 2140 பேர் கலந்து  கொண்டு முறியடித்துள்ளதாக அறிவித்த னர்.  உலக வரலாற்றில் இடம் பிடித்துள்ள  இம்மாபெரும் நிகழ்வு தமிழகத்திற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்ப்பதாகும்.