சீர்காழி, ஏப்.6 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரிலிருந்து ஆனந்தக்கூத்தன், சோதியகுடி, கீரங்குடி, சிதம்பரநாதபுரம் வழி யாக மாதிரவேளூர் செல்லும் தார்ச்சாலை பத்தாண்டுகளுக்கு மேல் மேம்படுத்தப்படா மல் மிகவும் மோசமாக உள்ளது. இதுகுறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சாலையை மேம்படுத்த வலியு றுத்தி கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவ லகத்தை முற்றுகையிடும் போராட்டம் செவ்வா யன்று நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க தலைவர் எல்.சுந்தரலிங்கம் தலைமை யில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலா ளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சிங்காரவேலன், ஒன்றிய செய லாளர் கே.கேசவன் மற்றும் பொதுமக்கள் கொள்ளிடம் புலிஈஸ்வரி அம்மன் கோயிலி லிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்று கையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த சீர்காழி டிஎஸ்பி லாமேக், இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்ட கணேஷ், பிடிஓ சரவணன், ஒன்றிய பொறியாளர் தாரா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட னர். ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் நிர்வாக அனுமதி பெற்று சாலை மேம்படுத்தும் பணி நடைபெறும் என அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து கலைந்து சென்றனர்.