திருச்சிராப்பள்ளி, மே 1 - திருச்சி மாவட்ட காவல்துறையினரால் இந்திய குற்றவியல் விசாரணை முறை சட்டம் 1973 பிரிவு 102- படி சந்தேகத்தின் பேரில் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத 233 இருசக்கர வாகனங்கள், மூன்று சக்கர வாக னம்-1 மற்றும் நான்கு சக்கர வாகனங்கள்-3 என மொத்தம் 237 வாகனங்கள் தற்போது உள்ள நிலையிலேயே மே 2 ஆம் தேதி காலை 10 மணிக்கு திருச்சி மாவட்ட ஆயுதப்படை மைதா னத்தில் பொது ஏலம் விடப்படுகிறது. வாகனங்களை ஏலம் எடுக்க விருப்ப முள்ளவர்கள் ஏலம் நடைபெறும் நாளான மே 2 (திங்கட்கிழமை) காலை 7 மணி முதல் 10 மணி வரை தங்களது ஆதார் அட்டையுடன் இரு சக்கர வாகனத்திற்கு ரூ.1,000 மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு ரூ.5,000 முன் பணம் செலுத்தி பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். ஏலம் எடுத்த உடன் சரக்கு மற்றும் சேவை வரி (இரு சக்கர வாகனத்திற்கு 12 சத வீதம் மற்றும் நான்கு சக்கர வாகனத்திற்கு 18 சதவீதம்) முழு தொகையையும் செலுத்தி வாக னத்தை பெற்றுக் கொள்ள வேண்டும். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பு நடவடிக்கை களை பின்பற்ற வேண்டும் என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தெரிவித்துள்ளார்.