districts

img

போக்குவரத்துக் கழக ஓய்வூதியத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வலியுறுத்தல்

வேதாரண்யம், ஜூன் 14 - 78 மாதமாக வழங்கப்படா மல் உள்ள அகவிலைப்படி உயர்வை நிலுவையுடன் உட னடியாக வழங்க வேண்டும்.  ஊதிய உயர்வு ஒப்பந்தங் களின்படி ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களுக்கும் குடும்ப மருத்துவ காப்பீடு திட்டத்தை உடனே அமல் படுத்த வேண்டும். ஓய்வு  பெற்றவர்களுக்கு ஓய்வுக் கால பணப் பலன்களை உடனே வழங்க வேண்டும். போக்குவரத்து கழக ஓய்வூதியத் திட்டத்தை அரசே  ஏற்று நடத்த வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கை களுக்கு தீர்வு காண தமிழக  அரசை வலியுறுத்தி, தமிழ் நாடு அரசு போக்குவரத்துக் கழக நாகப்பட்டினம் மாவட் டம் வேதாரண்யம் கிளை பணிமனை வாயில் முன்பு  தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழக ஓய்வு பெற் றோர் நலச் சங்கத்தினர் கோ ரிக்கை முழக்க ஆர்ப்பாட் டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் டி.குழந் தைவேலு, முத்துக்கண்ணு, கௌரவத் தலைவர்கள் கே. ஆர்.ஞானசேகரன், தலை வர் ஏ.வேதரத்தினம், செயலா ளர் வி.தியாகராஜன், பொருளா ளர் டி.வேலாயுதம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.