கரூர், ஜன.25 - தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் 8-வது கரூர் கோட்ட பேரவை கூட்டம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிட கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் கே.செவந்திலிங்கம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் வி.பழனிசாமி வரவேற்றார். கோட்ட இணைச்செயலாளர் ஆர்.சிவக்குமார் சங்க கொடியேற்றி வைத்தார். மாநில துணைத் தலைவர் டி.ராஜமாணிக்கம் கூட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். கரூர் மாவட்ட செயலாளர் பழனிச்சாமி வேலை அறிக்கை முன்வைத்து பேசினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட தலைவர் மு.சுப்ரமணியன், தமிழ்நாடு கல்வித் துறை நிர்வாக அலுவலர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் பொன்ஜெயராம், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் எம்.செல்வராணி பேசினர். தமிழ்நாடு நெடுஞ் சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.பாலசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார். கோட்டை துணைத் தலைவர் ஆர்.செல்வராசு நன்றி கூறினார். சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக் காலமாக கருதி ஆணை வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களின் பணி நீக்க காலத்தின் போது இறந்த சாலை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு விதி முறையை தளர்த்தி வாரிசு பணி வழங்க வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித் திறன் பெற ஊழியர்க ளுக்கான ஊதியம் ரூ.5200, ரூ.20,200, தர ஊதி யம் ரூ.1900 வழங்கிட வேண்டும். அதன் அடிப்படையில் ஏழாவது ஊதிய மாற்ற பலன்கள் வழங்க வேண்டும். நெடுஞ்சா லைப் பராமரிப்பு பணியை தனியாருக்கு வழங்கும் கொள்கை முடிவை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். நெடுஞ்சாலைத் துறை யில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு கிரா மப்புற இளைஞர்களை கொண்டு நிரப்ப வேண் டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.