திருச்சுழி, ஏப்.17- திருச்சுழி அருகே வீட்டில் தோஷம் கழிப்பதாக கூறி 3.5 பவுன் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற போலிச் சாமியாரை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சுழி பச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர்(60). கூலி வேலை செய்துவருகிறார். இவர் அருப்புக்கோட்டை யிலிருந்து திருச்சுழிக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தாராம். அப்போது, அவர் அருகே அமர்ந்த ஒருவர், உனக்கு தோஷம் உள்ளது எனவும் அதை போக்க வீட்டில் பரிகாரம் செய்ய வேண்டும். தோஷம் கழிக்கும் போது நகை மற்றும்பணத்தை தனியாக மூட்டையில் கட்டி வைக்க வேண்டும் என தெரிவித்தாராம். இதை நம்பிய ராஜசேகர், அவ்வாறே செய்துள்ளார். இந்தநிலையில், வீட்டிற்கு வந்த போலி சாமியார் தோஷம்கழிப்பது போல் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த 3.5 பவுன் தங்க நகை மற்றும்ரொக்கம் ரூ.3500 ஆகியவற்றை ஏமாற்றி எடுத்துக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து ராஜசேகர் கொடுத்த புகாரின் பேரில் திருச்சுழி போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.