மயிலாடுதுறை. ஜூலை 9 - தமிழறிஞர் சீகன்பால்கு தரங்கம் பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ மதத்தை பரப்பும் நோக்கில் டென்மார்க் அரசரால் அனுப் பப்பட்ட ஜெர்மனி நாட்டு கிறிஸ்தவ மத போதகரான (புராட்டஸ்டாண்டு) சீகன்பால்கு தரங்கம்பாடி வந்த 316 ஆவது ஆண்டு தினத்தையொட்டி தரங் கம்பாடியிலுள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு புதிய எருசலேம் ஆலய (சீகன்பால்கு கட்டியது) ஆயரும் மறை மாவட்ட தலைவருமான சாம்சன் மோசஸ் தலைமை வகித்தார். மாவட்ட கண்காணிப்பு ஆயர் நவராஜ் ஆபிர காம், பொறையார் பெத்லேகம் ஆலய ஆயர் ஜான்சன் மான்சிங், பிஷப் ஜான்சன் மேல்நிலைப்பள்ளி தலைமை யாசிரியர் ஜான் சைமன், சீகன்பால்கு ஆன்மீக மன்ற இயக்குநர் ஜஸ்டின் விஜயகுமார், சபை சங்க பொறுப்பாளர் கள், ஆயர்கள், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் புதிய எருசலேம் ஆலயத் தினுள் உள்ள சீகன்பால்கு அடக்கம் செய்யப்பட்டுள்ள இடத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி, பாடல்கள் பாடி வழிபாடு நடத்தினர். முன்னதாக சீகன்பால்கு கப்பலிலிருந்து இறங்கி நின்ற இடத்தில் நிறுவப்பட்டுள்ள நினைவிடத்தில் சிறப்பு வழிபாடும், மரியாதை செய்யும் நிகழ்ச்சியும் நடை பெற்று, பேரணியாக வந்தனர். 222 நாட்கள் கப்பலில் பயணம் செய்து 1706 ஜூலை 09-ல் தரங்கம் பாடி வந்த சீகன்பால்கு 1715 ல் இந்தியா விலேயே முதன்முதலில் தமிழில் பைபிளை, காகிதத்தில் அச்சடித்து வெளியிட்டார்.
இந்தியாவிலேயே முதன் முதலாக தரங்கம்பாடியில் அச்ச கம், காகித ஆலை, மை தயாரிக்கும் கூடத்தை அமைத்தார். தமிழ் நூல் களை காகிதத்தில் முதன்முதலில் அச்சேற்றினார். தமிழ் நாள்காட்டியை (காலண்டர்) முதன்முதலில் வெளியிட்டார், ஜெர்மன் மொழியிலான ஞானப்பாடல்களை தமிழில் மொழிபெயர்த்தார். தமிழ் நூல் களை ஜெர்மன் மொழியில் மொழி பெயர்த்தார். முதன் முதலில் தமிழில் அருளுரையாற்றினார். ஜெர்மனியில் தமிழ் மொழியை வளர்க்க வழிவகுத் தார் என இன்னும் பல்வேறு சாதனை களை தமிழ்மொழிக்காக செய்துள்ளார் தமிழறிஞர் சீகன்பால்கு. இவரின் தொண்டினை நினைவு கூரும் விதமாக தரங்கம்பாடியில் அவ ருக்கு மணிமண்டபத்தை கட்டுவதோடு, அவர் வந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத் தில் லண்டனில் கண்டுபிடிக்கப் பட்டுள்ள, சீகன்பால்குவால் அச்சடிக்கப் பட்ட பைபிளை தரங்கம்பாடிக்கு கொண்டு வர வேண்டுமென ஒன்றிய - மாநில அரசுக்கு தமிழ் சுவிசேஷ லுத்த ரன் திருச்சபையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். சீகன்பால்குவால் உருவாக்கப் பட்ட பிஷப் ஜான்சன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள சீகன் பால்கு சிலைக்கு மாலை அணி விக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலை மையாசிரியர் ஜான் சைமன் தலைமை வகித்தார்.