districts

அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்

திருச்சிராப்பள்ளி, ஏப்.6- திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ.13.37 கோடி மதிப்பிலான பணி களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வியாழனன்று காணொளிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி மாவட்டம், சமயபுரம், மாரியம்மன் கோவிலில் ரூ.3.76 கோடி  மதிப்பீட்டில் அமா வாசை மண்டபம் கட்டும் பணி,  ஸ்ரீரங்கம்,  அரங்கநாத சுவாமி திருக் கோவிலில் ரூ.2.50 கோடி  மதிப்பீட் டில் பசுமடம், மருத்துவமனை மற்றும் உணவு அறை கட்டும் பணியை முதல்வர் தொடங்கி வைத்தார்.  தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோ ணம், நாகேஸ்வரசுவாமி கோவிலில் ரூ.3.20 கோடி மதிப்பீட்டில் திரு மண மண்டபம் கட்டும் பணி. திருவா ரூர் மாவட்டம், குடவாசல், கோ ணேஸ்வர சுவாமி கோவிலில் ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் ஐந்து நிலை இராஜகோபுரம் கட்டும் பணி, ஊத்துக்காடு,  கைலாசநாதர் சுவாமி கோவிலில் ரூ.96 லட்சம் மதிப்பீட் டில் மூன்று நிலை இராஜகோபுரம் கட்டும் பணி, மன்னார்குடி, இராஜ கோபால சுவாமி கோவிலில் 1.20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருமண மண்டபம் கட்டும் பணியையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமைச் செய லாளர் முனைவர் வெ. இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும், காணொலிக் காட்சி வாயிலாக சமயபுரத்திலிருந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப் குமார், உள்ளாட்சி அமை ப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.