districts

நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்க கோரி சாலை மறியல்

பாபநாசம், மார்ச் 11- தஞ்சாவூரிலிருந்து அய்யம்பேட்டை வழியாக அகரமாங்குடிக்கு இரண்டு நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுகிறது. நிறுத்தப்பட்ட நகரப் பேருந்தை மீண்டும் இயக்க வலியுறுத்தி அய்யம்பேட்டையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக அகரமாங்குடிக்கு எண்.26 நகரப் பேருந்து இயக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தந்சாவூரிலிருந்து அகரமாங்குடிக்கு எண்.8 என்ற நகரப் பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அய்யம்பேட்டையில் உள்ள பள்ளிக்கு வந்து செல்கிற மாணவர்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர். தஞ்சாவூரிலிருந்து அகரமாங்குடி வரை மீண்டும் எண்.26 நகரப் பேருந்தை இயக்க வலியுறுத்தி அய்யம்பேட்டை பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலை மறியலுக்கு அகரமாங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன் தலைமை வகித்தார்.  இதுகுறித்த தகவலறிந்த அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா, சாலை மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிடச் செய்தார்.