districts

சிதம்பரம் கோவிலுக்கு சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்களை தீட்சிதர்கள் விற்றுவிட்டனர்

சென்னை, செப். 19 - தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக கூறப்படும் சிதம் பரம் நடராஜர் கோவிலுக்கு சொந்தமான 2000 ஏக்கர் நிலங்கள் குறித்த விபரங்களை ஆவணங்களுடன் அறிக்கை யாக தாக்கல் செய்ய வேண்டும்  என்று இந்து சமய அறநிலை யத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் 2008 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்தபோது 3 கோடி ரூபாய்க்கு மேல் வரு வாய் ஈட்டியது. தீட்சிதர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்த பிறகு ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய் மட்டுமே வருமானம் வருவதால் கோவில் வருவாய் கணக்கை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி இந்து சமய அறநிலை யத்துறை ஆணையர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், எஸ்.சவுந்தர் அடங்கிய சிறப்பு அமர்வில் வியாழனன்று (செப்.19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீட்சிதர்கள் தரப்பில், கோவில் தணிக்கை செய்யப்பட்ட வரவு செலவு கணக்கு விவரங்களை மூடி முத்திரையிடப்பட்ட உரையில் தாக்கல் செய்யப்பட்டது. மேலும், கோவிலுக்கு சொந்தமான ஆயிரம் ஏக்கர் நிலத்தை அறநிலையத் துறை யின் வட்டாட்சியர் நிர்வகித்து வருவதாகவும், அந்த நிலத்தி லிருந்து வாடகை வருவாய் 93 ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுவதாகவும் தீட்சிதர் கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கோவிலுக்கு மன்னர்கள் மற்றும் புரவலர்கள் 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தானமாக வழங் கிய நிலையில், தற்போது ஆயி ரம் ஏக்கர் மட்டுமே உள்ளது. அது குறித்து அரசு அறிக்கை தர வேண்டும். காணிக்கை வரவு, செலவு கணக்கை பராமரிக்க தனி திட்டத்தை வகுக்க தயா ராக இருப்பதாகவும் தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவிலுக்கு சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் 2 ஆயிரம் ஏக்கரை தீட்சிதர்கள் தனி நபர்களுக்கு விற்றுவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. வரவு - செலவை  தாக்கல் செய்ய தீட்சிதர்களுக்கு உத்தரவு 2 ஆயிரம் ஏக்கர் நிலம் விற் பனை செய்யப்பட்டது, ஆயிரம் ஏக்கரில் இருந்து ஒரு லட்சத்துக் கும் குறைவாகவே வருவாய் கிடைப்பது, பக்தர்கள் காணிக் கையை கணக்கில் வரவு வைக் காதது குறித்து அதிர்ச்சி தெரி வித்த நீதிபதிகள், 2017-18ஆம் ஆண்டில் இருந்து 2021-22 ஆம் ஆண்டு வரையிலான வரவு - செலவு கணக்கு புத்த கங்களை தாக்கல் செய்ய தீட்சி தர் தரப்புக்கு உத்தரவிட்டனர். பக்தர்கள் அளிக்கும் காணிக் கை, செலவுகள் குறித்து கணக்கு வைப்பதற்கான நடைமுறை யை உருவாக்கி, அதன் வரைவு நடைமுறையை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தீட்சி தர்கள் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், கோவிலுக்கு சொந் தமாக தற்போது  எவ்வளவு பரப்பு நிலம் உள்ளது என்பது குறித்து வட்டாட்சியர் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தர விட்டனர். 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்பனை செய்த குற்றச்சாட்டு குறித்த முழு விவரங்களை ஆவணங்களுடன் அறிக்கையாக தாக்கல் செய்ய அறநிலையத் துறைக்கு உத்தர விட்ட நீதிபதிகள், விசாரணை யை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.