districts

img

போக்குவரத்து பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்

கும்பகோணம், செப்.19-  கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் கும்பகோணம் அன்பு மருத்துவமனை  இணைந்து போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமை நடத்தின. போக்குவரத்துக்கழக கும்பகோணம் நிர்வாக இயக்குநர் ஆர். பொன்முடி  தொடங்கி வைத்தார். தேவையான ஆலோசனைகளும் மேல் சிகிச்சைக் கான அறிவுரைகளும் வழங்கப்பட்டன. இம்முகாமில் ஓட்டு நர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், அலுவலர்கள் என 320 பேர்  பங்கேற்றனர். மேல் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்து வக்கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சைகள் வழங்கப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.