districts

img

செம்பனார்கோவிலில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை, நவ.16 - மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோவில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சட்டமன்ற உறுப்  பினர் நிவேதா முருகன் செவ்  வாயன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு மேற்கொண் டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கிடங்கல், காலமாநல்லூர், சின்னங்  குடி, கீழையூர் உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகள் மற்றும் மழைநீரால் மூழ்கிய  விளைநிலங்களை பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் நிவேதா முருகன் பார் வையிட்டார்.  வீடுகளை இழந்த  அனைவருக்கும் அரசு சார்  பில் வீடு கட்டித்தர நடவ டிக்கை எடுக்கப்படும். சின் னங்குடி மீனவர் கிராமத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையம், அரசினர் உயர்  நிலைப்பள்ளியை சுற்றி  குளம் போல் தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்றவும் சேதமடைந் துள்ள புயல் பாதுகாப்பு மையத்தை புதிதாக கட்டித்  தரவும் விரைந்து நடவ டிக்கை எடுக்கப்படும் என  மீனவர்களிடம் உறுதியளித் தார். அதைத் தொடர்ந்து  கீழையூர், கிடாரங்கொண் டான், பொன்செய், தலைச்  சங்காடு உள்ளிட்ட ஊராட்சி களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதி மற்றும் விளைநிலங் களை பார்வையிட்டு நிவா ரணம் வழங்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்  றார்.