திருச்சிராப்பள்ளி, ஜூலை 25 - திருச்சி மாவட்டம் மண்ணச்ச நல்லூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாழ் மால்பாளையம் கிராமத்தில் வீட்டை இடித்து சேதப்படுத்திய கும்பலுக்கு துணை போகும் மண்ணச்சநல்லூர் காவல் துறையை கண்டித்தும், பட்டாவில் உள்ள பிழையை திருத்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாழ்மால்பாளையம் கிளைகள் சார்பில் திங்களன்று மண்ணச்சநல்லூர் எது மலை பிரிவு சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சந்திரன், சுப்ரமணியன் ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சேகர், நல்லையன், செல்வம் மற்றும் 15 பெண்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர்.