districts

தலித் இளைஞர் மீது தாக்குதல்: குற்றவாளிக்கு துணைபோகும் காவல்துறை

கிருஷ்ணகிரி. ஜூலை 12- கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வட்டம் உத்தணப்பள்ளி-ஓசூர் பிர தான சாலையிலுள்ள சாணமாவு கிரா மத்தில் தலித் இளைஞர் அம்ரிஷ் டிராக்டர் ஓட்டுநராக ராமப்பா என்ப வரிடம்  வேலை செய்து வந்தார். சம்ப வத்தன்று அம்ரிஷ் மாலை 7 மணிக்கு  வேலை முடித்து கூலி கேட்ட போது,  குடிபோதையில் இருந்த ராமப்பா கூலி கொடுக்க மறுத்து சாதி பெயரை சொல்லி இழிவாக பேசி கடு மையாக தாக்கியுள்ளார். இதனால், அம்ரிஷ்க்கு கை தோள்  பட்டையில் முறிவு ஏற்பட்டதுடன் உட லிலும் பல இடங்களில் கடுமையாக காயம் ஏற்பட்டுள்ளது. அத்துடன் தடுக்க வந்த முருகேஷ் என்பவரும் கல்லால் தாக்கப்பட்டதால் தலை யில் காயம் ஏற்பட்டது. இருவரும் முறையே ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.   இதுகுறித்து உத்தணப்பள்ளி காவல்துறையில் புகார் அளித்தும் இதுவரைக்கும் வழக்குப் பதிய வில்லை. அத்துடன் தாக்குதலுக்கு உள்ளான தலித் இளைஞர்களை மிரட்டி கட்ட பஞ்சாயத்து செய்ய முயற்சித்துள்ளனர்.

இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு  முன்னணி சார்பில் புகார் அளிக்கப்  பட்டது. அப்போதும் காவல்துறை யினர் வழக்கு பதியவில்லை. காவல் துறையிடம் பலமுறை முறையிட்டும் பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், சாதிய வன்மத்து டன் தாக்கப்பட்ட தலித் இளைஞர்க ளுக்கு நீதி கேட்டு உத்தனப்பள்ளி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செய லாளர் ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். தலைவர் நாகேஷ் பாபு, துணைத் தலைவர் இருதயராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்  ஆர்.சேகர், மாவட்ட குழு உறுப்பி னர் சேதுமாதவன், ஓசூர் வட்ட செய லாளர் பி.ஜி.மூர்த்தி, வட்ட குழு உறுப்பினர் சி.பி.ஜெயராமன், சூள கிரி வட்ட குழு உறுப்பினர் எம்.எம். ராஜூ, வாலிபர் சங்க மாவட்டச் செய லாளர் சுரேஷ், மாதர் சங்க மாவட்டச்  செயலாளர் ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி ஆகியோர் கலந்துகொண்டனர்.  

பாதிக்கப்பட்ட தலித் இளைஞர்க ளிடம் புகாரை மாற்றி எழுதிக் கொடு  என அலைக்கழித்ததுடன், அவர்க ளுக்கு மது போதை ஏற்றி விட்டு தாக்கிய சாதிவெறியர்களிடம் சமரச மாக போகச் சொல்லியும் தாக்கிய  ராமப்பாவிடம் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு தாக்கிய ராமப்பாவுக்கு ஆதரவாகவே காவல் துறையினர் வேலை செய்து  வருவதாக கூறப்படுகிறது. அத்துடன்  தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக  போராட்டம் நடக்கும் பட்சத்தில் அதில்  நீங்கள் கலந்து கொண்டால் உங்கள்  மீதே வழக்கு போட்டு ஐந்து ஆண்டு கள் உள்ளே தள்ளி விடுவேன் என தாக்கப்பட்ட தலித் இளைஞர்களை மிரட்டியதாகவும் தெரிகிறது. எனவே  சாதி வெறி தாக்குதல் நடத்திய  ராமப்பாவை கைது செய்ய வேண்டும், தாக்குதல் தொடுத்தவரி டமே பணம் வாங்கிக் கொண்டு தலித்  இளைஞர்களுக்கு எதிராக கட்டப்  பஞ்சாயத்து நடத்திய உத்தனப்பள்ளி காவல்துறை அதிகாரி மீது தமிழக அரசு சாதிய வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓசூர் சூளகிரி தேன்கனிக்கோட்டை வட்டங்களில் இதுபோல் நடந்து வரும் சாதி வன்முறை தாக்குதல்களை தடுத்து நிறுத்திடவும் மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  எனவும் தமிழக அரசிடம் கோரிக்கை  விடுக்கப்பட்டது. நிறைவாக உத்த ணப்பள்ளி வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர். சாணமாவு கிளை செயலாளர் ஆனந்தையா நன்றி கூறினார்.