districts

பொதுப் பாதையை மீட்க  கோரி ஆட்சியரிடம் மனு

 திருச்சிராப்பள்ளி, ஜன.31- அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்க முத்தரச நல்லூர் கிளை செயலாளர் ராஜேஷ் கண்ணா திங்களன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்த மனுவில் தெரிவித் திருப்பதாவது:  திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் ஒன்றியத்தில் முருங்கப் பேட்டை ஒரு பகுதியாக உள்ளது. இப்பகுதி மக்கள் காவிரி ஆற்றில் குளிப்பதற்கு, காவிரிக் கரையில் அமைந்துள்ள மாரி யம்மன் கோவில் வழியாக பொதுப் பாதையில் சென்று வந்த னர். மேலும் மாரியம்மன் கோவிலுக்கு சென்று அம்மனை வழிபட பொதுமக்கள் இப்பாதையை பயன்படுத்தி வந்தனர்.  இந்நிலையில் கடந்த 2 மாதத்துக்கு முன்பு பாதைக்கு அருகில் இருபுறமும் உள்ள நில உரிமையாளர் பொதுப்பாதை யில் கம்பி வேலி போட்டு பொதுமக்கள் பயன்படுத்த முடியாத வாறு செய்துள்ளார். இதனால் பொதுமக்கள் கோவிலுக்கும், காவிரி ஆற்றுக்கும் செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே தாங்கள் இந்த இடத்தை நில அளவை செய்து பொதுப்பா தையை மீட்டுத் தருமாறு இப்பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்  கொள்கிறேன்.  இவ்வாறு மனுவில் தெரிவித்திருந்தார்.