மயிலாடுதுறை, ஜன.29- மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தூய தெரசா கலை மற்றும் அறிவியல் மக ளிர் கல்லூரி வளாகத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் ஞாயிறன்று நடைபெற்றது. முகாமிற்கு கல்லூரியின் செயலாளர் அருட் சகோதரி கருணா ஜோசப் பாத் மற்றும் கல்லூரியின் முதல்வர் முனைவர் காம ராசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மயிலாடுதுறை புனித லூர்து மாதா மருத்துவமனை மருத்துவக்குழுவினர் சிகிச்சை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். முகாமில் அனைத்து வகை யான ரத்த பரிசோதனைகளும், இலவச மருந்து மற்றும் மாத்திரைகளும் வழங்கப்பட்டன.