மன்னார்குடி, ஏப்.29 - மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கான ஆரோக்கிய குழந்தை வளர்ப்புக்கான போட்டிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வேலம்மாள் அரங்கில் நடந்தது. இதில் 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை கடந்த 3 ஆண்டுகளில் வேலம்மாள் மருத்துவமனை யில் பிறந்த குழந்தைகள் 250 பேர் கலந்து கொண்டனர். 3 பிரிவுகளில் நடைபெற்ற ஆரோக்கிய குழந்தைபோட்டியில் 47 குழந்தைகள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கும் விழா வேலம்மாள் மருத்து வமனை அரங்கில் நடைபெற்றது. போட்டி யில் வென்ற குழந்தைகள் மற்றும் பெற்றோர் களை சிறப்பிக்கும் வகையில் ரூ.3 லட்சம் ரொக்க பரிசு தொகை வழங்கப்பட்டது. நிகழ்ச்சி யில் மரு.திருநாவுக்கரசு வரவேற்றார். வேலம் மாள் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிறுவன தலைவர் எம்.பி. முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர் (விருதுநகர்), சு.வெங்கடேசன் (மதுரை) ஆகியோர் போட்டியில் வென்ற குழந்தைகளுக்கு பரிசு களை வழங்கினர்.