திருச்சிராப்பள்ளி, மார்ச் 28- குறைந்தபட்ச ஊதியம் ரூ.26,000, ஓய்வூ தியம் ரூ.10,000 வழங்க வேண்டும். ஒப்பந்த முறை ஒழிக்கப்பட்டு ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 14 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சிராப்பள்ளி மாவட் டம் மண்ணச்சநல்லூர், கடைவீதி, நொச்சி யம் ஆகிய பகுதிகளில் ஆட்டோ சங்கத்தினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். பிரச்சாரத்தில ஆட்டோ சங்க மாவட்டத் துணைத் தலைவர் தண்டபாணி, சிஐடியு மாவட்டப் பொருளாளர் பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியச் செயலாளர் மனோகரன். ஹக்கீம், மணிவண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.