பேராவூரணி, ஜன.20- உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி, திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலை ப்பள்ளியில் நடைபெற்றது. பயிற்சியை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார் பார்வையிட்டு தன்னார்வலர்களுக்கு பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கினார். திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கண்ணப்பன், பேராவூரணி வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி கலந்து கொண்டனர்.