திருச்சிராப்பள்ளி, ஜூலை 20 - கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி யின் மரணத்திற்கு நியாயம் வழங்க வேண்டும். மாணவியின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். தனியார் பள்ளிகளில் தொடரும் மாணவ, மாணவிகளின் மரணத்தை தடுக்க வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் அனைத்திந்திய ஜனநா யக மாதர் சங்கம் சார்பில் செவ்வாய்க் கிழமை மாலை திருச்சி மாவட்டம் திரு வெறும்பூர் கடைவீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. போராட்டத்திற்கு அனுமதி மறுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட் டிருந்தனர். இந்நிலையில் வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் லெனின், மாதர் சங்க மாநில செயற்குழு உறுப் பினர் மல்லிகா, மாநகர் மாவட்ட தலை வர் ரேணுகா மற்றும் கவுன்சிலர் நித்யா, வாலிபர் சங்க காட்டூர் பகுதி நிர்வாகி கள், மாற்றுத்திறனாளிகள் சங்கம் செய லாளர் சித்ரா ஆகியோர் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீ சார் அராஜகமான முறையில், போராட் டத்தை நடத்த விடாமல் தடுத்து 15 பெண்கள் உள்பட 50 பேரை குண்டு கட்டாக தூக்கி சென்று கைது செய்த னர். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் லெனின், ஜனநாயக முறையில் போராடுகிற போராட்டங்களை ஒடுக்க நினைக்கும் தமிழக அரசையும், காவல் துறையும் கண்டிக்கிறோம் என்றார். திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதி யில் இந்திய மாணவர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் சூர்யா தலை மையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மாவட்டச் செயலாளர் மோகன், கிளைச் செயலாளர்கள் சட்டக் கல்லூரி கருப்பையா, பல்கலைக்கழக மாரியம்மாள், ஈ.வெ.ரா தருண் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். இதில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி ஏராள மானோர் கலந்து கொண்டனர்.