கபிஸ்தலம், டிச.8- சுவாமிமலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூ ரான் சர்க்கரை ஆலை சர்க்கரை ஆலை முறைகேடாக விவ சாயிகள் பெயரில் பெற்ற ரூ.300 கோடி வங்கி கடனைத் தீர்க்க வேண்டும். விவசாயிகளின் கரும்பு கிரயத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பயிர்க் கடன் தொகையை வங்கியில் செலுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்தி ருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 8-ஆவது நாளான புதனன்று எருமை மாட்டிடம் மனு கொடுக்கும் போராட்டமும், வியாழனன்று தண்டோரா எச்சரிக்கை போராட்டமும் நடைபெற்றன. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.