நாகப்பட்டினம், பிப்.11 - கர்நாடகாவில் உள்ள கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவியர் களுக்கு உடைக் கட்டுப்பாடு வழங்கப்பட்டதை கண்டித்து நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கல் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக ஆளுகிற கர்நா டக மாநிலத்தில் உள்ள கல்வி நிலையங்களில் இஸ்லாமிய மாணவியர்கள் தங்களு டைய மத வழக்கத்தின் அடிப் படையில் உடை அணிந்து வருவதற்கு கட்டுப்பாடு விதித்ததை எதிர்த்து கர்நா டகா மற்றும் நாடெங்கிலும் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சங்பரிவார அமைப்புகள் இதை கலவரமாக்கி கொண்டி ருக்கின்றன. இவையனைத்தும் மாண வர்கள் மத்தியில் நஞ்சை விதைக்கும் செயலாக ஆர்எஸ்எஸ் - பாஜக கும்ப லால் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெறுகிறது. இதனை கண்டிக்கும் விதமாக நாடெங் கிலும் இடதுசாரி இயக்கங் கள் போராட்டங்களை நடத்தி வருகிறது. இதை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றியங்கள் சார்பாக சிக்கல் கடை தெருவில் கண்ட னம் முழக்கப் போராட்டம் நடைபெற்றது. நாகை வடக்கு ஒன்றிய செயலாளர் வீ.வீ.ராஜா தலைமை வகித்தார். தெற்கு ஒன்றிய செயலாளர் ஏ.வடி வேல் முன்னிலை வகித்தார். நிறைவாக மாவட்ட செயற் குழு உறுப்பினர் ப.சுபாஷ் சந்திரபோஸ் கண்டன உரை யாற்றினார். மாவட்ட குழு உறுப்பினர் செந்தில்குமார் மற்றும் ஒன்றிய குழு உறுப் பினர்கள் கலந்து கொண்ட னர்.