திருச்சிராப்பள்ளி, ஜன.8 - கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் நாள்தோ றும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்நி லையில் திருச்சி ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நி லைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாணவர்கள் படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக இந்த பள்ளியில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தினசரி நேரடி வகுப்புகளும், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு சுழற்சி முறையிலும் வகுப்பு கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கடந்த ஜன.3, 4 ஆம் தேதிகளில் இந்த பள்ளியில் படித்து வரும் 15 வயது முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்க ளுக்கு கொரோனா தடுப் பூசி செலுத்தும் முகாம் நடை பெற்றது. அப்போது சில மாணவர்களுக்கு மட்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று இருப் பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாண வர்கள் தனிமைப்படுத்தப் பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.