districts

விபத்துகளை ஏற்படுத்தும் கால்நடைகள்: தரங்கம்பாடி பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை

மயிலாடுதுறை, அக்.14 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக் கண்ணன், பேரூராட்சி மன்ற தலைவர் சுகுண சங்கரி குமரவேல் ஆகியோர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், தரங்கம்பாடி தேர்வு  நிலை பேரூராட்சி பகுதியான தரங்கம் பாடி, சாத்தங்குடி,  பொறையாறு, எருக்கட்டாஞ் சேரி மற்றும் கைகாட்டி பகுதி ஒழுகை மங்கலம், கீழமேட்டுப்பாளையம், நண்ட லாறு சோதனைச் சாவடி ஆகிய பகுதி களில் உள்ள கிராம தெருக்களிலும் பிரதான  சாலைகளில் உயிரிழப்பு போன்ற பெரிய விபத்து ஏற்படுத்தும் வகையில் மாடு, குதிரை கள் உள்ளிட்ட கால்நடைகள் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரி கின்றன. அவற்றை அதன் உரிமையாளர் தங்க ளது சொந்த பாதுகாப்பில் வளர்த்துக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் அக்.14 முதல் மாடுகள் மற்றும் குதிரைகள் பிடிக்கப்பட்டு, உரிமையாளர்களிடம் ரூபாய்  ஆயிரம் அபராதமும், பராமரிப்பு செலவும் வசூலிக்கப்படும் என கூறியிருந்தனர். அதனைத் தொடர்ந்து தரங்கம்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பூபதி கமலக் கண்ணன் தலைமையில், சுகாதார ஆய்வா ளர் இளங்கோ, இளநிலை உதவியாளர் மதிய ரசன், வரித்தண்டலர் கருணாநிதி மற்றும் 10- க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பொறை யார் சந்தைவெளி தெருவில் வெள்ளியன்று போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சுற்றி திரிந்த  மாடுகளை பிடித்து அடைத்தனர்.