districts

img

மின்விசை அறை, பேரிடர் கால தங்கும் முகாம்கள் திறப்பு

திருவாரூர், டிச.5- திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் களப்பால் ஊராட்சியில் ஓஎன்ஜிசி சமூகப் பொறுப்புணர்வு திட்டத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி குழாய் அமைப்பு மற்றும் மின்விசை அறை ஆகியவற்றை ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் அனுராக் தலைமையில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் திறந்து வைத்தார்.  விழாவில் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, கோட்டூர் ஒன்றிய பெருந்தலைவர் மணிமேகலை முருகேசன், ஊராட்சி மன்றத் தலைவர் சுஜாதா பாஸ்கரன், ஒன்றிய கவுன்சிலர் சாந்தி பாலசுந்தரம், ஓஎன்ஜிசி பொறியியல் துறை அதிகாரி சுதிஷ், பொது மேலாளர் சம்பத், ஏரியா மேனேஜர் சரவணன், மேலாளர் கண்ணன், கட்டுமான பிரிவு மேலாளர் ரெத்தினம், மக்கள் தொடர்பு அதிகாரி ராஜசேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் முருகானந்தம், கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   இதேபோல் திருத்துறைப்பூண்டி ஒன்றியம் கொறுக்கை ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்குப் பகுதியிலிருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட பொதுமக்களின் மழை மற்றும் வெள்ளக்கால பயன்பாட்டிற்காக, ஓஎன்ஜிசி சார்பில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட இரண்டு தங்கும் முகாம் கட்டிடங்களை ஓஎன்ஜிசி செயல் இயக்குநர் அனுராக் முன்னிலையில் நாகை நாடாளு மன்ற உறுப்பினர் செல்வராஜ் மற்றும் திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் திறந்து வைத்தனர்.