மன்னார்குடி, செப்.29- திருவாரூர் மாவட்ட மக்க ளைத் தேடி மருத்துவ ஊழி யர்கள் சங்க மாவட்ட அமைப்பு பேரவை கூட்டம் மன்னார் குடியில் மாநில துணைத்தலை வர் பி.மணிமொழி தலைமை யில் நடைபெற்றது. சிஐடியு மாவட்டச் செய லாளர் டி.முருகையன், மாவட்ட நிர்வாகிகள் ஜி.ரெகு பதி, பி.என்.லெனின், ஏ. கோவிந்தராஜ், டி.ஜெகதீ சன், அ.அரிகரன், மாநில நிர் வாகிகள் கடலூர் பி.சரிதா, நாகை ஏ.வனிதா, தஞ்சை பி.சாய்சித்ரா உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர். மாவட் டம் முழுவதும் பணியாற் றும், 200-க்கும் அதிகமான மக்களைத்தேடி மருத்துவ ஊழியர்கள் கலந்து கொண்டனர். பேரவையில், மாவட்டத் தலைவராக சி.செல்வி, மாவட்டச் செயலாளராக பி. மணிமொழி, மாவட்டப் பொருளாளராக பி.ஜமுனா ராணி மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள், மாவட்ட துணைச் செயலா ளர்கள், வட்டார நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். பேரவையில், மக்களை தேடி மருத்துவ ஊழியர் களுக்கு குறைந்தபட்ச ஊதி யமாக ரூ.21 ஆயிரம், டபிள்யூஎச்வி (WHV) தன் னார்வலர்களை முழுநேர ஊழியராக்க வேண்டும், ஊழியர்களின் வங்கிக் கணக்கில் மாத ஊதியத்தை வழங்கிட வேண்டும், தீபா வளி பண்டிகைக்கு ஒரு மாத ஊதியத்தை தமிழக அரசும், மக்கள் நல்வாழ்வு துறையும் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.