திருவாரூர், ஜன.10- திருவாரூர் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் பேரளம், விஷ்ணுபுரம் மற்றும் மதகரம் ஆதிதிராவிடர் நல தொடக்கப் பள்ளிகளில் 3 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், மன்னார் குடி - சவளக்காரன் அரசு ஆதி திராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில் ஒரு பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் காலியாகவுள்ளது. காலிப் பணியிடங்கள் பற்றிய விவரம் திருவா ரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் நன்னிலம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலுவலக அறிவிப்புப் பலகை யில் ஒட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட காலிப் பணியிடங்கள், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் முற்றிலும் தொகுப்பூதிய முறையில் தற்காலிகமாகவும், நிபந்தனையின் அடிப்படையிலும் நிரப்பப்படவுள்ளது. இப்பணி யிடங்களுக்கான ஊதியம் - இடைநிலை ஆசிரி யருக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியருக்கு ரூ.10,000 வீதம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்கான கல்வித் தகுதி பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியருக்கு, வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதியுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலராக இருப்பவர் களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இல்லை யெனில், வரையறுக்கப் பட்ட கல்வித் தகுதிகளுடன், ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (TET). இடைநிலை ஆசிரியர் நியம னத்தில் பட்டியலினத்தவருக்கு முன்னுரிமை அளிக் கப்படும். பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் பள்ளிக்கு அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக் கப்படும். பணி நாடுநர்கள், திருவாரூர் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் மற்றும் நன்னிலம் ஆதிதிராவிடர் நல தனி வட்டாட்சியர் அலு வலகத்தை அணுகி, விண்ணப்பிக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பு வோர், தங்களது எழுத்து மூலமான விண்ணப்பத் தினை உரிய கல்வித் தகுதிச் சான்று மற்றும் இதர ஆவணங்களுடன் நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ திருவாரூர் மாவட்ட ஆட்சியரக வளா கத்தில் உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நல அலுவலகத்தில் 13.1.2023 மாலை 5.45-க்குள் வழங்கிடுமாறு மாவட்ட ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.