திருவாரூர், மார்ச் 3- திருவாரூர் வட்டம் அம் மையப்பன் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் ஜிஆர்எம் பெண்கள் மேல் நிலைப்பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு பொது தேர்வு நடை பெறுவதை மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வை யிட்டார். பின்னர் மாவட்ட ஆட்சி யர் கூறுகையில், ‘‘திருவா ரூர் மாவட்டத்தில் 55 தேர்வு மையங்களில் நடைபெறும் 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 6,528 மாணவர்கள், 7,502 மாணவிகள் என மொத்தம் 14,030 மாணவ, மாணவிகள் எழுதுகின்ற னர். இதில், 116 மாற்றுத்திற னாளி மாணவர்களுக்கான உதவியாளர்களும் நியம னம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வுப்பணிக்கு 1,161 ஆசிரியர்கள் மற்றும் அலு வலகப்பணியாளர்கள் பணி யமர்த்தப்பட்டுள்ளனர். அர சுத் தேர்வுகள் இயக்குநரால் வழங்கப்பட்டுள்ள வினாத் தாட்கள், 6 கட்டுக்காப்பு மையங்களில் 24 மணிநேர மும் ஆயுதம் தாங்கிய காவ லர் பாதுகாப்புடன் வைக் கப்பட்டுள்ளது. தேர்வுகளை கண்கா ணிக்க கல்வித்துறை அலுவ லர்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலர்கள் தலை மையில் 5 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து தேர்வு மையங்களிலும் காவல் துறையுடன் இணைந்து 89 நிலையான படை அமைக் கப்பட்டுள்ளது’’ எனத் தெரி வித்தார்.