திருவாரூர், ஜன.11 - கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஓஎச்டி ஆபரேட்டர்கள், தூய்மை காவ லர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு மாதந்தோறும் சம்பளம் வழங்கிட வேண் டும். நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் எம்.முரளி தலை மையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொங்கல் வைக்கும் போராட்டம் நடைபெற்றது. இதில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள் மற்றும் என்எம்ஆர் ஊழி யர் சங்கம், சிஐடியு மாவட்ட செயலாளர் டி. முருகையன், மாவட்ட தலைவர் எம்.கே.என்.அனிபா, மாவட்ட பொருளாளர் இரா.மாலதி உள்ளிட்ட பலர் ஈடுபட்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஊராட்சி உதவி இயக்குநர் பொன்னியின் செல்வன், கோரிக்கைகளை நிறைவேற்று வதாக உறுதியளித்ததால், போராட்டம் தற் காலிகமாக கைவிடப்பட்டது. நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் 20 வகையான நிரந்தர பணிகளை தனி யார் மயமாக்கும் அரசாணை எண் 152 ரத்து செய்ய வேண்டும். அனைத்து ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களை நிரந்தரப்படுத் திட வேண்டும். பழைய பஞ்சம் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும் என வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட நகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர்கள், என்எம்ஆர் ஊழியர் சங்கம், சிஐடியு இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட தலை வர் என்.அனிபா, மாவட்ட பொருளாளர் இரா.மாலதி, மாவட்ட துணைத் தலைவர் ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.