districts

img

வீடுகளை காலி செய்ய அறிவிப்பு: ஆட்சியரிடம் மக்கள் முறையீடு!

திருவண்ணாமலை,மார்ச்.9- திருவண்ணாமலை மாவட்டம், போளூர் தாலுகா அத்திமூர், கலியம், அண்ணாநகர், பால்வார்த்து வென்றான், சந்தவாசல் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொது மக்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கணேஷிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். அதில், நாங்கள், எங்கள் பகுதியில் 3 தலை முறையாக வசித்து வருகின்றோம். தற்போது நாங்கள் இருக்கும் பகுதி நீர்நிலை ஆக்கிரமிப்பு பகுதி என்று கூறி எங்கள் வீடுகளை காலி செய்ய அரசு தரப்பில் கடிதம் வழங்கப்பட்டு உள்ளது.  193  வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளன. எங்கள் குடும்பத்தினர் யாரும் அரசு வேலையிலோ, நிரந்தர ஊதிய பணியிலோ இல்லை. அனைவரும் கூலி தொழில் தான் செய்து வருகின்றோம். நாங்கள் வேறு இடத்தில் வீடு கட்டவோ, குடிபெயர்ந்து செல்லவோ வசதியில்லாத நிலையில் வாழ்ந்து வருகின்றோம். பொதுமக்களுக்கும், போக்கு வரத்துக்கும், அரசின் சொத்துக்கும் எந்த வித பாதிப்பும் இலலாமல் வருகின்றோம். எனவே எங்களது வீடுகளை காலி செய்ய அனுப்பப்பட்ட கடிதத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று தெரி வித்திருந்தனர்.  மார்க்சிஸ்ட் கட்சி மாவட்டச் செய லாளர் எம்.சிவக்குமார், நிர்வாகிகள் எம். வீரபத்திரன், ப.செல்வன், ராம தாஸ்,ரவிதாசன், சிவாஜி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.