districts

img

என். சங்கரய்யா பிறந்தநாள் விழா கருத்தரங்கம்

திருவண்ணாமலை,ஜூலை 17- சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா 101 ஆவது பிறந்தநாள் கருத்த ரங்கம் கலசபாக்கம் பஜார் வீதியில் நடை பெற்றது. சிபிஎம் வட்டார செயலாளர் பி.சுந்தர் தலைமை வகித்தார். “வெறுப்பு அரசியலும்,விபரீத முடிவு களும் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, “வேலையில்லா திண்டாட்ட மும், வீணடிக்கப்படும் இளைஞர்களின் கனவுகளும்” என்ற தலைப்பில் மாநிலக் குழு உறுப்பினர் இரா.சிந்தன். “தினமும் ஏறும் விலைவாசி நாம் என்ன செய்யலாம் யோசி” என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.சிவ குமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.வீரபத்திரன், ப.செல்வன், பாரி, வாசுகி,எஸ்.ராமதாஸ், ஏ.லட்சுமணன். மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.கே.வெங்கடேசன், ஆர்.அண்ணாமலை, ச.குமரன்,எஸ்.லூர்துமேரி,ரவிதாசன்,பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். கிளைச் செயலாளர் ஏ.முருகன் நன்றி கூறினார்.