districts

img

கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் தொடக்கம்

திருவண்ணாமலை, மே 24- திருவண்ணாமலை மாவட்டத்தில் 122 ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தை தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தைச் செயல்படுத்த 122 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. தேர்வு செய்யப்பட்டுள்ள கிராம ஊராட்சி களில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டுவந்து நீர் ஆதாரங்களைப் பெருக்கி, வேளாண் உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியைப் பெருக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம். அதன்படி, தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை சென்னை தலைமைச் செய லகத்தில் இருந்தபடியே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (மே 23) தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டம், சு.பொலக்குணம் கிராமத்தில் இந்தத் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்தார்.  தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி கலந்து கொண்டு இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். மேலும் வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த துறைகள் சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியைத் திறந்து வைத்து விவசாயிகளுக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.