districts

img

6 மாத ஊதியம் நிலுவை ஆட்சியர் அலுவலகத்தில் முறையீடு

திருவண்ணாமலை, ஜூலை 11- திருவண்ணாமலை மாவட்டம், மேல் பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக மஸ்தூர் பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். சிக்குன் குனியா, டெங்கு மற்றும்  கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது, அவர்களுக்கு உணவு வழங்குவது, அவர்கள் பயன்படுத்தும் கழிவறைகளை சுத்தம் செய்வது  உள்ளிட்ட பணிகளை 119க்கும் மேற்பட்ட மஸ்தூர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை 119 பணியாளர்களுக்கு ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை.  பலமுறை ஒன்றிய ஆணையரிடம் முறையிட்டும் பணம் இல்லை என்று தட்டிக் கழித்து வருகின்றனர். எனவே ஆறு மாத சம்பள பாக்கியை உடனே வழங்கி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.