districts

img

தேர்தல்வாக்குறுதியை நிறைவேற்றி வியாபாரிகளை பாதுகாத்திடுக சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர், மார்ச் 17- கந்து வட்டி கொடுமையிலிருந்து சாலை யோர வியாபாரிகள் விடுபட, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.15 ஆயிரம் வழங்கப் படும் என்ற தேர்தல் வாக்குறுதியை அமலாக்க வேண்டும்உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் வெள்ளியன்று (மார்ச் -17)  கும்மிடிப்பூண்டியில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  சாலையோர வியாபாரிகளை விடுபடா மல் கணக்கெடுப்பு நடத்திட அடையாள அட்டை வழங்கிட வேண்டும், வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும், சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டம் 2014 குறித்து அரசு அதிகாரி கள், காவல்துறையினருக்கு முறையாக  பயிற்சி அளிக்க வேண்டும், சுயதொழில் செய்ய விலையில்லா தள்ளு வண்டிகளை முறைகேடுகள் இன்றி வழங்க வேண்டும், கந்து வட்டி கொடுமையிலிருந்து சாலையோர  வியாபாரிகளை மீட்க, கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும் என்ற  தேர்தல் வாக்குறுதியை அமலாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கும்மிடிப்பூண்டியில் வெள்ளி யன்று (மார்ச் -17) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கும்மிடிப்பூண்டி பகுதி தலைவர் வி.ஜோசப் தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு மாநில செயலாளர் சி.திருவேட்டை,  வியாபாரிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் டி.கோபாலகிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் வி.குப்பன், சிபிஎம் வட்டச் செயலாளர் இ.ராஜேந்திரன், கட்டுமான சங்கத்தின் பகுதி செயலாளர் எம்.சி.சீனு ஆகியோர்  பேசினர்.