districts

6 வழிச்சாலைக்கு ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலம் எடுப்பு உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

 திருவள்ளூர், மார்ச் 9-  ஆந்திர மாநிலம் சித்தூர் - முதல் பொன்னேரி அருகில் உள்ள தச்சூர் வரை  6 வழிச்சாலையை கொண்டு வருவதில், நெடுஞ்சாலைத்துறை யினர் தீவிரமாக உள்ளனர். இதற்கு 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத் தின் கீழ் இழப்பீடு வழங்க கோரி திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள்   போராடி வருகின்றனர். தமிழகத்திற்கு வடக்கேயுள்ள மாநிலங்களில் இருந்து, சென்னை க்கு அருகிலுள்ள எண்ணூர்  மற்றும் காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகங்களுக்கு சரக்கு வாகனங்கள் வேகமாகவும், நெரிசலி ன்றியும் வருவதற்காக 126 கி.மீட்டர் தூரத்திற்கு ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த சாலை ஆந்திராவில் 82 கி.மீட்டரும், தமிழ்நாட்டில் 44 கி.மீட்டர் தூரமும் பயணிக்க உள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூரில் தொடங்கும் இந்த சாலை ரங்கராஜபுரம், நகரி, விஜயா புரம் வழியாக தமிழ்நாட்டில் திரு வள்ளூர் மாவட்டத்தின் பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, பொன்னேரி வழியாக தச்சூரில் ஏற்கனவே சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் இணைகிறது. இந்த சாலை அமைப்பதற்கான மொத்த மதிப்பீடு ரூ.3,197 கோடி. இந்த சாலை என்எச்.716 என்று அழைக் கப்படும். மொத்தமாக 2,186 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்படும். அதில் 889 ஏக்கர் நிலம் தமிழகத்தில் திரு வள்ளூர் மாவட்டத்தில் கையகப் படுத்தப்பட உள்ளது.

விவசாயிகள் ஆர்ப்பாட்டம் அரசு திட்டங்களுக்கு ஆதரவு அளித்த தச்சூர் முதல் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை திட்டத்திற்கு நிலம் தரும் விவசாயிகளுக்கு 2013 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் இழப்பீடு சந்தை மதிப்பீட்டில் வழங்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் புதனன்று (மார்ச்-9) மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் சி.பெருமாள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  பாதிக் கப்பட்ட 200க்கும் மேற்பட்ட விவசா யிகள் ஒவ்வொருவரும் தனித்தனி யாக மனு அளித்தனர். சட்டவிரோதம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநில துணைத் தலைவர் டி.ரவிந்திரன் பேசுகையில்,  2003 நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் கீழ் நிலம் எடுக்கிறோம் என்று சொல்லி திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலத்தை எடுத்திருக்கிறார்கள். சட்டப்படியான நிலத்திற்கான உயர்ந்த பட்ச இழப்பீட்டை சந்தை மதிப்பீட்டில் வழங்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது அதை நிறைவேற்ற வேண்டும். ஒரு தென்னை மரத்திற்கு இழப்பீடாக 36 ஆயிரத்து 700 ரூபாய் வழங்க வேண்டும் என்ற சட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஒரு விவசாய தோட்டத்தில் 200 தென்னை மரங்கள் இருந்தால் 71- லட்சம் ரூபாய் வழங்கிய பிறகு தான் தென்னை மரத்தை வெட்ட வேண்டும் என்றும் சட்டம் இருக்கிறது. இப்படி எந்தவித நடைமுறைகளையும் பின்பற்றவில்லை.

நிலம் கையகப் படுத்து திட்டத்தை செயல்படுத் துவதற்கான அதிகாரி நேரடியாக விவ சாயிகளை தனித்தனியாக வரவ ழைத்து விசாரணை என்ற பெயரில் விவசாயிகளை மிரட்டி நிலத்திற் கான அசல் பத்திரத்தை வாங்கி வைத்துள்ளனர். இது சட்ட விரோத மாகும். திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் ஆயிரம் ஏக்கர் அளவிற்கு நிலத்தை எடுத்து,  ஆறு வழி சாலைக்கு பயன்படுத்த உள்ளனர். இந்த நிலையில் மரம்,  பயிர் வகை களுக்கும், நிலத்திற்கும் உரிய இழப்பீடு வழங்குவதற்கான அரசு ஆணை பிறப்பிக்க வேண்டும். 2013 நிலம் படுத்துகின்ற சட்டத்தின் அடிப் படையான நோக்கமே மறுவாழ்வு தான் மறுவாழ்வுக்கான உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்காமல் நிலத்தில் இறங்கி அனுமதிக்கமாட்டோம்  என்றார். இந்நிலையில் நிலம் கைய கப்படுத்தும் அதிகாரிகள் விவசாயி களை மிரட்டி வாங்கி வைத்துள்ள அசல் பத்திரங்களை மீண்டும் விவசாயிகளிடம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர்  தலைவர்களிடம் உறுதியளித்தார். இந்த போராட்டத்தில்,  மாநிலச் செயலாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட தலைவர் ஜி.சம்பத்,  மாவட்டத் துணைத் தலைவர் பி.ரவி, மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜெயச் சந்திரன் மாதர் சங்க மாவட்ட தலைவர் கீதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.