திருவள்ளூர்,செப் 1- சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தை திரும ணம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி ஆற்காடு குப்பம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வியாழனன்று (செப் 1) நடை பெற்றது. பள்ளிக் கல்வித் துறை சார்பாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்துரை யாடினார். திருவள்ளுர் மாவட் டத்தில் பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக சிறப்பு திட்டமாக ஆக 24 அன்று அலமாதியில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் துவக்கி வைக்கப்பட்டது. போதைப் பழக்க வழக்கங்களின் தாக்கங்கள் குறித்து திருத் தணி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர், வளரி ளம் பருவ குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து சென்னை சமத்துவ கல்வி நிறுவன இயக்குநர், சுத்த மும், சுகாதாரமும் குறித்து சானிடேசன் ஃபர்ஸ்ட் இந்தியா, திட்ட மேலாளர் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் மாணவர்களிடையே எடுத் துரைத்தனர். இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவ லர் த.ராமன், மாவட்ட துணை காவல் கண்காணிப் பாளர் த.விக்னேஷ், சென்னை சமத்துவகல்வி நிறுவன இயக்குநர் சாம் சுந்தர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.