திருவள்ளூர்,மார்ச் 19- பூவிருந்தவல்லி வட்டம், நெமிலிச்சேரி இருளர் பாளையத்தில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு அரசு சார்பில் 25 ஆண்டுகளுக்கு முன்பு 7 தொகுப்பு வீடுகள் கட்டிக் கொடுக்கப் பட்டது. தரமான கட்டுமான பணி கள் நடைபெறாததால், மழைக்காலத்தில் மேற்கூரை மற்றும் பக்க வாட்டு சுவர் வழியாக மழை நீர் வீட்டுக்குள் கசிகிறது. இதனால் மின்சாரம் சுவரில் பாய்ந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் அரசு தொகுப்பு வீடுகள் அனைத்தும் மேற்கூரை பெயர்ந்து படுக்கையில் விழுகிறது. இதனால் மரணபயத்தில் பழங்குடிமக்கள் நாட்களை கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் புதனன்று (மார்ச் 15) இரவு துரை, பச்சையம்மாள் என்பவரின் வீட்டு மேற்கூரை பெயர்ந்து படுக்கையில் விழுந்துள்ளது. இதில் அவர்களது மகள் அஞ்சலிக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். பழங்குடி இன மக்கள் நிம்மதியாக வாழ சேதமடைந்துள்ள வீடு களை பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் கட்டித் தர வேண்டும். மேலும் குடிமனை பட்டா, மற்றும் தொகுப்பு வீடுகளை ஒரு மாதத்தில் கட்டிக் கொடுக்கப் படும் என வட்டார வளர்ச்சி அலுவலர், கோட்டாட்சியர் ஆகியோர் உறுதியளித் திருந்தனர். நான்கு மாதங்கள் கடந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. விரைவில் பழங்குடி இன மக்களின் தேவையை நிறைவேற்றி தரவேண்டும் என தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசன், மாவட்ட குழு உறுப்பினர் ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பூவை நகர செயலாளர் பாரி ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.