திருவள்ளூர், நவ.16- திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின்று குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால ஏணியில் ஏறி மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர். திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக மேல்விளாகம் ,கலியனூர் கலியனூர் காலனி, மணவூர், நெமிலிய கரம்,குப்பம் கண்டிகை,, இராஜபத்மாபுரம், மருதவல்லிபுரம், ஒண்டி குச்சி, சின்னம்மா பேட்டை, ஜாகிர் மங்கலம், பழையனூர், காபுல் கண்டிகை, உள்ளிட்ட 13 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளது. இத னால் அப்பகுதி மக்கள் 20 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது. விடையூர் கலியனூர் இணைக்கும் வகை யில் கடந்த 2016- 2017 ஆம் ஆண்டு 3 கோடி 60 லட்சம் திட்டம் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட மேம்பால பணி கடந்த 5 ஆண்டுகளாக நிறுத்ததி வைக்கப்பட்டுள்ளது. தற்போது கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதால், அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் விடையூர் பகுதியில் உள்ள மேல்நிலைப்பள்ளிக்கு ஆற்றின் குறுக்கே பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பால ஏணி யில் ஏறி ஆபத்தான முறையில் சென்று வருகிறார்கள். ஆண்டுதோறும் பருவ மழை காலங்களில் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 13 கிராமங்கள் துண்டிக்கப்படுவதும் மாணவர்கள் பொதுமக்கள் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் முடங்குவதும் தொடர் கதையாக இருப்பதால் இதற்கு விடிவு காலமே இல்லையா என அம்மக்கள் கேட்கிறார்கள். இத்தகைய அவல நிலையை போக்க பாதியில் நிறுத்தப்பட்டுள்ள மேம்பாலத்தை அரசு விரைந்து முடித்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.