திருப்பூர், டிச. 26 – திருப்பூர் மாவட்டம் குடிமங்கலம் ஒன்றியம் புக்குளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக வெண் மணி தியாகிகள் நினைவு தினப் பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஞாயிறன்று மாலை புக்குளம் கிராமத்தில் தியாகிகள் திடலில் நடை பெற்ற பொதுக் கூட்டத்துக்கு கிளைச் செயலாளர் மந்திரியப்பன் தலைமை வகித்தார். இதில் எம்.கனகராஜ் வர வேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். குமார், குடிமங்கலம் ஒன்றியச் செய லாளர் என்.சசிகலா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் வெ.ரங்கநாதன், ஆர்.ஓம்பிரகாஷ், ஏ.தங்கவடிவே லன் ஆகியோர் வெண்மணி தியாகி கள் தினம் குறித்தும், விவசாயிகள் வாழ்வாதாரம் பிரச்சனைகள் பற்றி யும் உரையாற்றினர். இக்கூட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர். நிறைவாக எஸ்.செல்லமணி நன்றி கூறினார்.
கொடியேற்றம்:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் திருப்பூர் வடக்கு ஒன்றியத் துக்கு உட்பட்ட அங்கேரிபாளையம், நெரிப்பெரிச்சல், சேடர்பாளையம், குருவாயூரப்பன் நகர், பிச்சம்பா ளையம் புதூர் ஆகிய ஐந்து இடங் களில் வெண்மணி நினைவு தின செங் கொடி ஏற்றும் நிகழ்வு நடை பெற்றது. இதில் தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், ஒன்றியச் செயலாளர் ஆர்.காளியப்பன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ.சிகா மணி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாண்டியன், மகாலிங்கம், பி.கே. கருப்புசாமி, பஞ்சாலை சங்க மாவட் டத் தலைவர் கே.பழனிச்சாமி, முன் னாள் மாமன்ற உறுப்பினர் கே. மாரப்பன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் ரங்கசாமி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி, ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணசாமி உள் பட திரளானோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
அவிநாசி:
அவிநாசியில் 54ஆம் ஆண்டு வெண்மணி தியாகிகள் தினத்தை முன்னிட்டு வேலாயுதம்பாளையம் ஊராட்சி, செம்பியநல்லூர் ஊராட்சி, வடுகபாளையம் ஊராட்சி, நடுவச் சேரி ஊராட்சி, புதுப்பாளையம் ஊராட்சி உள்ளிட்ட இடங்களில் விவ சாய தொழிலாளர் சங்கத்தின் கொடி கள் ஏற்றப்பட்டு வெண்மணி தியா கிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சண்மு கம், ஒன்றிய தலைவர் முருகேஷ், ஒன்றிய துணைச் செயலாளர் பழனிச் சாமி, ஒன்றிய பொருளாளர் முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் முரு கன், ஒன்றிய நிர்வாகி பொன்னுச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பள்ளபாளையத்தில் சிறப்புப் பேரவை:
பள்ளபாளையம் ரத்னகுமார் தோட்டத்தில் வெண்மணி தியாகி கள் 54ஆவது தினமான டிச.25ல் சிறப் புப் பேரவைக் கூட்டம் உடுமலை கமிட்டி உறுப்பினர் எஸ்.ஜெகதீசன் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலாளர் பி.எஸ்.சுந்தரம் முன்னிலை வகித்தார். ரத்னகுமார் வரவேற்றார். கட்சியின் “மத்தியக் குழு முடிவுகளும், கடமைகளும்” என்ற தலைப்பில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஆர்.குமார் விளக்க வுரை ஆற்றினார். தொடர்ந்து “வெண்மணி தியாகிகளின் வீரவர லாறு” என்ற தலைப்பில் உடுமலை ஒன்றியச் செயலாளர் கி.கனகராஜ் உரையாற்றினார். விவசாயிகள் சங்க தலைவர் ஏ.ராஜகோபால் நன்றி கூறினார். இந்நிகழ்வில் கமிட்டி உறுப்பினர் கள் மற்றும் கிளைச் செயலாளர்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்ற னர். முன்னதாக வெண்மணி தியாகி கள் தின உறுதிமொழியேற்கப்பட் டது.