districts

img

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்கள் சார்பாக 569 மனுக்கள்

திருப்பூர், டிச.26- திருப்பூர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில்  திங்களன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத் தில், பொது மக்கள் சார்பில் அடிப்படை கோரிக்கைகள் தொடர்பாக 569 மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சித்தலைவர் எஸ்.வினீத் தலைமையில் நடை பெற்ற இக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து வீட்டுமனை பட்டா மற்றும்  முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப  அட்டை வேண்டியும், சாலை வசதி, குடிநீர் வசதி வேண்டியும்  என பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 569 மனுக்களை  பெற்றுக் கொண்டதுடன் மனுதாரர்கள் முன்னிலையிலேயே விசாரணை செய்து அதன் மீது உரிய நடவடிக்கையினை மேற் கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அ. லட்சுமணன், துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்)அம்பாயிரநாதன், துணை ஆட்சியர்கள் மற்றும் அனைத்து  அரசுத்துறைகளின் அலுவலர்கள் பலர்  கலந்து கொண்ட னர்.