அவிநாசி, மார்ச் 31- அவிநாசியில் இரண்டாவது நாளாக சுகாதாரத் துறை யினர் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, முறைகேடாக இயங்கி வந்த மருத்துவ மனைகளுக்கு சீல் வைத்தனர். திருப்பூர் மாவட்டம், அவிநாசி பகுதியில் இரண்டாவது நாளாக சுகாதாரத் துறையினர் பல்வேறு தனியார் மருத்துவ மனைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில், அவி நாசி சூளை பகுதியில் சாய் கிருஷ்ணா என்ற மருத்துவ மனை மருத்துவரின்றி இயங்கி வந்தது ஆய்வில் தெரிய வந்தது. இதையடுத்து, மருத்துவமனை ஊழியர்களை வெளியேற்றிவிட்டு, மருத்துவமனைக்கு பூட்டு போட்டு சென்றனர். இதன்பின், ஆட்டையம்பாளைத்தில் சாய் கிளினிக் என்ற பெயரில் இயங்கி வந்த தனியார் மருத்துவமனையில் சுகாதாரத்துறையினர் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, முறையான ஆவணங்கள் மற்றும் மருத்துவ ரின்றி அந்த மருத்துவமனை இயங்கி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அந்த மருத்துவமனைக்கு அதிகாரி கள் சீல் வைத்தனர். மேலும், அவிநாசியை அடுத்து கைகாட்டிப்புதூரில் போலி மருத்துவர் கைது செய்யப்பட்டு, அந்த மருத்துவமனை மற்றும் ஆய்வகம் சீல் வைக்கப்பட் டது.